பெருங்கனவு

திர்பாரா
பேருந்துப் பயணத்தில்
எதிரே இருந்தாள்
தேவதை
பேசிக்கொள்ளவுமில்லை
பார்த்துக்கொள்ளவுமில்லை
புரிந்துகொண்டோம்
உறக்கமற்று
துயரமுற்ற நெஞ்சம்
கறுமையப்பிய
காந்த விழிகளால்
கலவரம் கொண்டு
துயிலெழுந்தது
பெருங்கனவு

ஆடையுரித்த தேவதை
உறக்கம் கெடுத்தால்
பின்னிரவு
பெருந்துயரம்
பேச்சிலர்களுக்கு
தலையணையில் தேவதை
கண்ணசைத்தாள்
பேரிருளில் சிக்கியவன்
பேருந்தானேன்
கறுஞ்சாலையில்
தோய்த்தெடுத்தாள்
கடும்பிரம்மர்ச்சர்யத்தை
வெள்ளையடிக்கப்பட்ட
நெடு்ஞ்சாலையாய்
தேகம் புரண்டெழுந்தது
தலையணையில்
தேவதை நிர்மூலமானாள்
நான்
தேவனானேன்!

Comments

Popular Posts