வண்ணத்துப்பூச்சியோ... அருண்மொழியோ...

ந்த மனிதரை... இல்லையில்லை இந்த கலைஞனைச் சந்தித்து நீண்ட நாட்களாகிறது. அதனால் என்ன? இரண்டு மாதங்களுக்கு முன்னால் என் வீட்டுத் தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியும் இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை... வாழ்வில் சில மனிதர்களை கிடைக்கும்போது தரிசித்துக் கொள்ள வேண்டும்... அது வண்ணத்துப்பூச்சியோ... அருண்மொழியோ...ஒரு பேருந்துப் பயணத்தில் பயணச்சீட்டு எடுக்காமல் உள்ளே வந்துவிட்ட வண்ணத்துப்பூச்சியை வளைத்து வளைத்து அருண்மொழி தன் வீடியோவில் பதிவு செய்தார்...எனக்கு வாய்க்கவில்லை...அருண்மொழியை என் கேமராவில் பதிவு செய்ய...வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கும்...கலைஞனுக்கும்தான்...கிடைக்கும்போது தரிசித்துக்கொள்ள வேண்டும்...அது வண்ணத்துப்பூச்சியோ... அருண்மொழியோ...

Comments

Popular Posts