ஒரே போர்வையின் பிடியில்...
மழலையின் கனவுப் பிரதேசத்தில் நுழைந்து தானும் ஒரு குழந்தையாய் மீண்டும் அதனுடன் கைக்கோர்த்து விளையாட எத்தனிக்கும் தாய். வாழ்வில் தான் எதிர்கொள்ள வேண்டிய எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுபிடிப்பதற்காக தாயின் கதகதப்பில் தன்னை சிறை வைத்திருக்க...ும் மழலை. ஒரு உலகத்தில் இரண்டு குழந்தைகள் ஒரே போர்வையின் பிடியில். ஆனால் கனவுகள் வேறு வேறு. எல்லையற்ற பேரன்பை மனதில் சுமக்கும் தகப்பனாகிய ஒளிப்படக் கலைஞன். வாழ்வில் எல்லா தரிசனங்களும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது மனைவியையும், மகனையும் ஒரே கனவில் பார்க்கிற வாய்ப்பு.
Comments
Post a Comment