திரை - 9

"அவள் அப்படித்தான்'படத்தைத் தொடர்ந்து "கிராமத்து அத்தியாயம்' படத்தை எடுத்தார் ருத்ரைய்யா. இந்தப் படத்திலும் நானும் நல்லுச்சாமியும் ஒளிப்பதிவாளராக சேர்ந்துப் பணியாற்றினோம். இந்தப் படத்திற்காக இரவும், பகலும் மாறி, மாறிப் படப்பிடிப்பை நடத்தி, முடித்தோம். இந்தப் படத்திற்கும் இளையராஜா ஸôர்தான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தபோது அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள தவறினோம். அதன்பின் நாங்கள் வாய்ப்புத் தேடியபோது எங்களுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்தச் சமயத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் திரைப்படப் பிரிவில் ஒளிப்பதிவாளராக ( சங்ஜ்ள் ழ்ங்ங்ப் ஸ்ரீஹம்ங்ழ்ஹம்ஹய் ) சேர்ந்து, பணியாற்றினேன். அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். அந்தச் சமயம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட டெல்லியிலிருந்து ராஜீவ்காந்தி அவர்கள் வந்திருந்தார். காலையில் வந்த அவர் மாலை வரை சென்னையின் அனைத்து முக்கியப் பகுதிகளையும் பார்வையிட்டார். இதனை உடனிருந்து முழுவதுமாக படம் பிடித்தேன். அதேப்போல் அப்போதைய ஜனாதிபதி ஞானி சியால் சிங் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் படம் பிடித்தேன். அந்த சமயத்தில்தான் திருவாரூர் தேரானது தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு மறுபடியும் தேரோட்டம் விடப்பட்டது. அப்போது செய்தி மற்றும் இந்து அற நிலையத்துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் பொறுப்பேற்றிந்தபோது இதனைச் செய்து முடித்தார். இந்த தேரோட்டத்தை முழுவதுமாக படம் பிடிப்பதற்காக திருவாரூருக்கு இரண்டொரு நாட்கள் முன்னதாகவேச் சென்று, தங்கி முழுவதுமாக அந்த நிகழ்வைப் படம் பிடித்தேன். இது தமிழ்நாடு செய்தி மற்றும் திரைப்படப் பிரிவில் பணியாற்றியபோது கிடைத்த மறக்க முடியாத நிகழ்வுகளாகும். அடுத்து, 1982- நான் படித்த திரைப்படக் கல்லூரியில் தொலைக்காட்சிப் பிரிவில் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன். அப்போது மாணவர்களுக்கு தொலைக்காட்சி சம்பந்தமான பாடங்கள் மட்டுமின்றி, சினிமாட்டோகிராஃபி பாடத்தையும் எடுப்பேன். அந்த சமயத்தில் மாணவர்களாக படித்த ராஜீவ் மேனன், அல்போன்ஸ் ராய்,அப்துல் ரகுமான், பன்னீர் செல்வம், தங்கர் பச்சான், ஜிம் கணேஷ், ரவியாதவ்,கோபி கண்ணதாசன் போன்றவர்கள் இன்று இந்திய சினிமாவில் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
திரைப்படக் கல்லூரியில் தொலைக்காட்சிப் பிரிவிலிருந்து பிறகு ஒளிப்பதிவு பிரிவுக்கு விரிவுரையாளராகத் தேர்வு செய்யப்பட்டேன். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் அக்கல்லூரியில் பணியாற்றினேன். மேலும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது இயக்குநர்களான ஆர்.வி.உதயகுமார், யூகி சேது, ஆர்.கே.செல்வமணி, தமிழ் அழகன் போன்றவர்கள் இயக்கம் பிரிவிலும், நாசர், ஆனந்தராஜ், "தலைவாசல்' விஜய் போன்றவர்கள் நடிப்புப் பிரிவிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒளிப்பதிவுப் பிரிவில் பயின்ற ராஜீவ் மேனனும், அல்போன்ஸ் ராயும் வகுப்பறையில் மட்டுமின்றி, வகுப்பறைக்கு வெளியேயும் நிறைய சந்தேகங்களை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் வகுப்பறையில் கற்றுக் கொண்டதைவிட வகுப்பறைக்கு வெளியே கற்றுக் கொண்டதுதான் அதிகம் என்றால் அது மிகையில்லை! திரைப்படக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் டெல்லியில் அள்ண்ஹக் 1982 விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன. அதனைப் படம் பிடிப்பதற்காக இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் 60 ஒளிப்பதிவாளர்கள், அவர்களுக்கு உதவுவதற்காக உதவி ஒளிப்பதிவாளர்கள் இன்ன பிற தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவைப்பட்டனர். அப்போதுதான் டெல்லி தூர்தர்ஷன் ஆனது கருப்பு, வெள்ளையிலிருந்து கலருக்கு மாற்றப்படுகிறது. மத்திய திரைப்பட பிரிவானது மொத்த விளையாட்டு நிகழ்வுகளையும் ஃபிலிமில் படம் பிடிக்க முடிவு செய்து ஆட்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தனர். அந்த வகையில் சென்னை - திரைப்படக்கல்லூரியில் பயிலும் மாணவர்களையும் தேர்வு செய்தனர். அந்த மாணவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பும் எனக்கிருந்தது. நாங்கள் அங்குப் போனபோது எங்களுக்கொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. அது அந்த விளையாட்டுப் போட்டிகளைப் படம் பிடிக்கும் குழுவில் இயக்கம் பிரிவில் பாபு ராமசுவாமியும் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கும் அள்ண்ஹக் 1982ல் ஒளிப்பதிவு செய்யும் (ஞச்ச்ண்ஸ்ரீண்ஹப் ஸ்ரீஹம்ங்ழ்ஹ ம்ஹய்) வாய்ப்புக் கிடைத்தது சந்தோஷத்தை அளித்தது. இந்த விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த பிறகு, இந்த போட்டிகளை படம் பிடித்த விதத்தைப் பற்றி அமெரிக்காவின் புகழ்பெற்ற அம்ங்ழ்ண்ஸ்ரீஹய் இண்ய்ங்ம்ஹற்ர்ஞ்ழ்ஹல்ட்ங்ழ் இதழில் கட்டுரையும், நடுப்பக்கத்தில் 60 ஒளிப்பதிவாளர்களும் ஒன்றாக நின்று எடுத்தப் புகைப்படமும் வெளியானது. இது எனக்கும், எனது சக ஒளிப்பதிவாளருக்கும் கிடைத்த பெரிய கெüரவமாக உணர்ந்தேன். 1985-ல் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நஸ்ரீண்ங்ய்ற்ண்ள்ற் உய்ஞ்ண்ய்ங்ங்ழ் ஆக பணியில் அமர்ந்தேன். அதுவரை கேள்விப்பட்டிருந்த பல வகையான கேமராக்களைப் பார்க்க்கூடிய வாய்ப்பும் குறிப்பாக, டட்ர்ற்ர்ள்ர்ய்ண்ஸ்ரீ ஏண்ஞ்ட் ள்ல்ங்ங்க் ஙர்ஸ்ண்ங் இஹம்ங்ழ்ஹ (500 ச்ழ்ஹம்ங்ள் ல்ங்ழ் ள்ங்ஸ்ரீர்ய்க்), ஏண்ற்ஹஸ்ரீட்ண் ஏண்ஞ்ட் ள்ல்ங்ங்க் டழ்ண்ள்ம் இஹம்ங்ழ்ஹ (5000 ச்ழ்ஹம்ங்ள் / ள்ங்ஸ்ரீர்ய்க்), ஏன்ப்ஸ்ரீட்ங்ழ் 70ம்ம் ஸ்ரீஹம்ங்ழ்ஹ, ஏஹள்ள்ஹப்க்ஷப்ஹக் ஸ்ரீஹம்ங்ழ்ஹ, சண்ந்ர்ய் 2000ம்ம் ம்ண்ழ்ழ்ர்ழ் ப்ங்ய்ள், இங்ப்ங்ள்ற்ழ்ர்ய் 4000 ம்ம் ற்ங்ப்ங்ள்ஸ்ரீர்ல்ங் ப்ங்ய்ள் போன்றவற்றில் வேலை செய்யும் வாய்ப்பும் எனக்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்ற பின்னர்தான் கிடைத்தது! இங்கு பணியாற்றும்போதுதான் என்னுடைய அறிவுத் தேடலுக்கு சரியான தீனிக் கிடைத்ததை உணர்ந்தேன். முதலில் ஜூனியர் இன்ஜினியராக இருந்த நான், பிறகு அந்தத் துறையில் படிப்படியாக தலைமைப் பதவி வரை பதவி உயர்வு அடைந்தேன். ஏறக்குறைய இருபது வருடங்கள் (1985-லிருந்து 2005 வரை) அங்கு பணியாற்றினேன். நான் பணியில் சேரும்போது நகய3 மட்டுமே விண்ணில் ஏவப்பட்டு இருந்தது. இதற்கு திரு. அப்துல் கலாம் அவர்கள் திட்டக்குழு இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார். அதன் பிறகுதான் அநகய (அன்ஞ்ம்ங்ய்ற்ங்க் நஹற்ங்ப்ப்ண்ற்ங் கஹன்ய்ஸ்ரீட் யங்ஸ்ரீட்ண்ஸ்ரீப்ங்), டநகய (டர்ப்ஹழ் நஹற்ங்ப்ப்ண்ற்ங் யங்ட்ண்ஸ்ரீப்ங்) எநகய (எங்ர் நஹ்ய்ஸ்ரீட்ழ்ர்ய்ர்ன்ள் நஹற்ங்ப்ப்ண்ற்ங் கஹன்ய்ஸ்ரீட் யங்ட்ண்ப்ங்) போன்ற ராக்கெட்டுகள் விண்வெளியில் ஏவப்பட்டன. இந்த எல்லா திட்டங்களிலும் ஒளிப்பதிவில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. இதில் எநகய (எங்ர் நஹ்ய்ஸ்ரீட்ழ்ர்ய்ர்ன்ள் நஹற்ங்ப்ப்ண்ற்ங் கஹன்ய்ஸ்ரீட் யங்ட்ண்ப்ங்) ராக்கெட்டை விண்ணில் ஏவும்போது அவற்றை முழுவதுமாகப் படம் பிடிக்கும் பொறுப்பு என்னிடம், என் குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முதன் முதலாக டழ்ண்ற்ட்ஸ்ண் ஏவுகணைப் பரிசோதனைச் செய்யப்பட்டது ஸ்ரீஹரிஹோட்டாவில்தான்! அப்போது புகைப்படப் பிரிவில் நான் பணியாற்றினேன். அதேப்போன்று அஞ்ய்ண் ஏவுகணையை ஒரிஸôவில் இருந்து ஏவப்பட்டபோது அந்த ஏவுகணையை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பும், அதைப் படம் பிடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அப்போது பிரபல பத்திரிகையில் அக்னி ஏவுகணை புறப்படும் புகைப்படத்துடன் முதல் பக்க செய்தி வெளியாகியிருந்தது. அந்த புகைப்படத்தையும் நான்தான் எடுத்தேன். அதேப்போல் நான் சிறிது மாற்றங்களுடன் உருவாக்கித் தந்த யண்ள்ன்ஹப் ஞக்ஷள்ங்ழ்ஸ்ங்ழ் என்ண்க்ங்ள்ஸ்ரீர்ல்ங் என்ற உபகரணம் மற்றும் ரேடாருக்குப் பயன்படுத்தப்படும் ஞல்ங்ய் ள்ண்ஞ்ட்ற் என்ற உபகரணத்தையும் வடிவமைத்துக் கொடுத்தேன். இவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நல்ஹஸ்ரீங் இஹல்ள்ன்ப்ங் தங்ஸ்ரீர்ஸ்ங்ழ்ஹ் உஷ்ல்ங்ழ்ண்ம்ங்ய்ற் (நதஉ), ஞல்ற்ண்ஸ்ரீஹப் பழ்ஹஸ்ரீந்ண்ய்ஞ் ஙர்ன்ய்ற் போன்ற திட்டங்களிலும் பங்கு வகித்திருக்கின்றேன். அங்கு ராக்கெட்டைப் பற்றித் தயாரிக்கப்பட்ட பல ஆவணப்படங்களுக்கு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழகம் வரும்போதெல்லாம் நண்பர்களைச் சந்தித்து இங்கு ஒளிப்பதிவில் நிகழும் மாற்றம் குறித்து அறிந்து கொள்வேன். அதேப் போல் என்னுடைய மாணவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு நட்பைப் புதுப்பித்துக் கொண்டேயிருப்பார்கள். அந்த வகையில் ராஜீவ் மேனனும் என்னைச் சந்திப்பார். நானும் அவரைச் சந்திப்பேன். இந்த சூழலில் தான் ராஜீவ்மேனன், திரைப்படக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்க இருப்பதாகவும், அந்த கல்லூரிக்கு தலைவராக நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் நான் யோசித்தேன். முப்பது வருடங்களாக கற்ற விஷயங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று எண்ணினேன். இருபது வருடங்கள் எனது பணி நிறைவடைந்தவுடன், விருப்ப ஓய்வுப் பெற்றுக்கொண்டு இக்கல்லூரியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேன். ராஜீவ் மேனனைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், விளம்பரப் பட இயக்குநர் என்பதையெல்லாம் தாண்டி அவரை ஒரு சிறந்த ஆசிரியராகத்தான் நான் பார்க்கிறேன். அவர் பாடம் எடுக்கும் பாணியே அலாதியானது. அவர் வகுப்பு எடுக்கும்போது மாணவர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கவனிப்பார்கள். அந்தளவிற்கு தெளிவாகவும், சுவாரஸ்யத்துடனும் பாடம் எடுக்கத் தெரிந்தவர். வகுப்பறையில் மட்டுமில்லை, படப்பிடிப்பிலும் கூட அவர், தனது உதவியாளர்களுக்கு அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுப்பார். அதனால்தான் இன்று அவருடைய உதவியாளர்கள் இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களாக வலம் வருகின்றனர் (இயக்குநர் கெüதம் வாசுதேவ்மேனன், ஒளிப்பதிவாளர்களான ஆர்.டி.ராஜசேகர், ரவி கே.சந்திரன், ரத்னவேலு, ரவிவர்மன் போன்றவர்கள்....) பொதுவாக பலர் ஏதேனும் ஒரு துறையைப் பற்றித்தான் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், ராஜீவ் மேனனிடம் நீங்கள் எந்தத் துறைக் குறித்தும் விவாதிக்கலாம். எல்லாத்துறைப் பற்றிய அடிப்படை அறிவு அவரிடம் இருக்கும். அதனால்தான் சொன்னேன் "அவர் ஒரு சிறந்த ஆசிரியர்' என்று! மற்ற கல்லூரிகளில் எல்லாம் அந்தத் துறைப் பற்றி தெரிந்த, அறிந்த மாணவர்கள் மட்டுமே உயர் படிப்பில் சேர்ந்து பயிலுவார்கள். ஆனால், எங்களது மைன்ட்ஸ்கீரின் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயிலும் மாணவர்கள் பலரும் வெவ்வேறு துறையிலிருந்து வந்தவர்கள். ஆகவே, அவர்களுக்கு வகுப்பு எடுப்பது சவாலான விஷயமாகும். சமீபத்தில் எங்களிடம் படித்த பல மாணவர்கள் தமிழ் சினிமாவிலும், மற்ற மொழி சினிமாவிலும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர். இதுவரை 8ற்ட் க்ஷஹற்ஸ்ரீட் ற்கு ஒளிப்பதிவு கற்றுக் கொடுத்து அனுப்பியிருக்கிறோம். சமீபத்தில் திரைக்கதைப் பயிற்சிப் பாடப்பிரிவும் எங்களது நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் நிறைய விஷயங்கள் ஒளிப்பதிவில் இருப்பதால்தான் தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றுகிறேன். என்னுடைய பல தரப்பட்ட அனுபவங்கள் என்னுடைய மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பது என் வாழ்வில் கிடைத்த அரிய பொக்கிஷமாகும். அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே!

Comments

Popular Posts