தனிமையின் உறக்கம்
யாருமற்ற இரவுகளில்
உறக்கமற்று
திரிகிறது
தனிமை
முன்னெச்செரிக்கையாய்
அழுகையை
திருடிக்கொள்கிறேன்
என்னிடமிருந்து
தோழியின்
பேச மறுத்த
வார்த்தைகளை
அடைக்காத்தபடி
நகர்கிறது
நகரியம்
பின்னிரவுகளில்
மொட்டை மாடியில்
நிலாவை கவனித்தபடி
தலையனையைக்
கட்டிக்கொண்டு
உறங்குகிறது
அவளின்
ஒற்றை வார்த்தையான
"பொறம்போக்கு நாயே'
Comments
Post a Comment