பாசாங்கற்ற நகரம்

தயமற்ற வெளியிலிருந்து
ஒரு பறவை றெக்கையை
அடித்துக்கொள்கிறது
முறிந்த சிறகுகளைப் பார்த்து
விம்மி புடைக்கிற அதன்
கோரப்பார்வையில்
அர்த்தமற்றதாய் தோன்றுகிறது
அதற்கு இவ்வுலகம்
வானத்தின் நீண்ட தூரத்தில்
தன் கண்களை அகலவிரித்து
ஆச்சர்யம் கொள்கிறதாய்
தன்னை அர்த்தப்படுத்திக்கொண்டு
பாசாங்கற்ற நகரத்தை நோக்கி
தன் றெக்கைகளை
பறக்க விடுகிறது
புதிய சூரியன் மெல்ல
அதன்வழி நோக்கி எழும்புகிறான்
ஜன்னல்கள் திறந்து கொள்கின்றன
இதயம் உருகத் தொடங்கி ஓடுகிறது
வீதிகளை நனைத்தபடி

Comments

Popular Posts